Wednesday, July 3, 2024
Home » குயின் இணையதள தொடரை எதிர்த்த வழக்கு ஜெயலலிதா வாழ்க்கை மீது களங்கம் ஏற்படுத்துகிறது: ஐகோர்ட்டில் ஜெ.தீபா தரப்பு குற்றச்சாட்டு

குயின் இணையதள தொடரை எதிர்த்த வழக்கு ஜெயலலிதா வாழ்க்கை மீது களங்கம் ஏற்படுத்துகிறது: ஐகோர்ட்டில் ஜெ.தீபா தரப்பு குற்றச்சாட்டு

by kannappan

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனை வைத்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய குயின் என்ற இணையதள தொடர் வெளியானது. இதை எதிர்த்து ஜெ.தீபா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தீபா தரப்பில் ஆஜரான வக்கீல், கௌதம் மேனன் இயக்கி வெளியான குயின் இணையதள தொடர்  தனியார் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகியுள்ளது. இதில், ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை தாண்டி அவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், அவரின் குடும்பத்தார் மீதும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. தீபாவின் தந்தை போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்பது போல குயின் தொடரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….

You may also like

Leave a Comment

1 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi