குமரி எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம்

நெல்லை, மே 30: இணைப்பு ரயில் வருகை தாமதம் காரணமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக நெல்லைக்கு வந்து புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். கன்னியாகுமரியில் இருந்து தினமும் சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தினமும் மாலை 5.50 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு இரவு 7 மணிக்கு வந்து சேரும். அதன்பின்னர் இங்கிருந்து புறப்பட்டு சென்னை செல்லும்.

திருவனந்தபுரத்தில் இருந்து வரக்கூடிய இணை ரயில் காலதாமதம் ஏற்பட்ட காரணத்தால் நேற்று கன்னியாகுமரியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் 7.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு இரவு 9.33 மணிக்கு வந்தது. அதன்பிறகு இரவு 9.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்னை சென்றது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 2வது நாளாக நேற்றும் 2 மணி நேரம் தாமதமாக சென்னைக்கு சென்றது. இதனால் நெல்லை உள்ளிட்ட வழித்தட ரயில்நிலையங்களில் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு