குமரியில் நிலச்சரிவு காரணமாக எழும்பூர்-கொல்லம் ரயில் பகுதியாக ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: குமரியில் நிலச்சரிவு காரணமாக எழும்பூர்-கொல்லம் இடையே  இயக்கப்படும் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே  அறிவித்துள்ளது. கன்னியாகுமரி-நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது  குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: நாகர்கோவில்-திருவனந்தபுரம்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் (06426, 06427), திருவனந்தபுரம்-  நாகர்கோவில் விரைவு பயணிகள் ரயில் (06435) நேற்று ரத்து செய்யப்பட்டது. மேலும் சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (16723)  நாகர்கோவில்-கொல்லம் இடையேயும், கொல்லம்- சென்னை எழும்பூர் இடையே  இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16724) நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் கொல்லம்-நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்பட்டது. அதைப்போன்று பெங்களூர்வில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட பெங்களூரு- குமரி விரைவு ரயில் (16526) திருவனந்தபுரம்-குமரி இடையே ரத்து செய்யப்படுகிறது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை