குமரியில் நடந்த ஜாயின்ட் சரக்கு பார்ட்டி ஆண் நண்பர்களுக்கு போதை விருந்து சொகுசு பங்களாவில் கல்லூரி மாணவிகள் கும்மாளம்: ஆடியோவைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி

நாகர்கோவில் : குமரியில் பங்களா வீட்டில் நடந்த ஜாயின்ட் பார்ட்டியில் போதையின் உச்சத்தில் ஆண் நண்பர்களுக்கு கல்லூரி மாணவிகள் படுக்கை விருந்தளித்து கும்மாளம் போட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியான ஆடியோ பெற்றோரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். சென்னை, மும்பை போன்ற மாநகரங்களில் வீக் என்ட் பார்ட்டிகள், பிரபல நட்சத்திர ஓட்டல்களில் நடப்பது வழக்கம். இந்த பார்ட்டிகளில் ஆண்களுடன் சேர்ந்து இளம்பெண்களும் மது அருந்தி, போதையில் நண்பர்களுக்கு படுக்கை விருந்தளிப்பார்கள். இதை நவீன நாகரிகமாக தற்போதைய இளம்பெண்கள் கருதுகிறார்கள். ஐ.டி. உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் இளம்பெண்கள் இது போன்ற உல்லாச பார்ட்டிகளால் சீரழிக்கப்படுகிறார்கள். இவர்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவிகளும் இதன் மூலம் தங்களது எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள். மார்டன் சிட்டிகளில் மட்டுமே பிரபலமான இந்த ஜாயின்ட் பார்ட்டிகள் தற்போது சாதாரண நகரங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது. கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியிலும் விருப்பப்பட்ட ஆண் நண்பர்களை வரவழைத்து கல்லூரி மாணவிகள் உல்லாச விருந்தளித்த தகவல்கள் அம்பலமாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் குளச்சல் அருகே சமீபத்தில் ஒரு பங்களாவில் நடந்த பிறந்தநாள் பார்ட்டியில் கல்லூரி மாணவிகள், ஆண் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டி கொண்டாட்டம் மொட்டை மாடியில் நடந்துள்ளது.  இதில் பங்கேற்ற மாணவி ஒருவரை, அவரின் பள்ளி தோழன் சரமாரியாக தாக்கினான். பார்ட்டிக்கு அழைக்கப்படாத அந்த தோழன், அந்த பங்களாவின் அருகில் உள்ள புளிய மரம் வழியாக  மொட்டை மாடிக்கு வந்து மாணவியை தாக்கி விட்டு தப்பினான். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், மாணவியை தாக்கிய பள்ளி தோழன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் தன்னை காதலித்து வந்த மாணவி, கல்லூரிக்கு சென்ற பின் தடம் மாறியதால் ஆத்திரத்தில் தாக்கியதாக தெரிய வந்தது. இதையடுத்து அந்த பார்ட்டியில் பங்கேற்ற மாணவர்கள், மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக இளம்பெண் ஒருவர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதில் பேசும் இளம்பெண், கல்லூரி மாணவி ஆவார். பிறந்தநாள் பார்ட்டி என்ற பெயரில் இரவு நேரங்களில் தோழியின் உறவினர் ஒருவரின் பங்களாவில் ஆண் நண்பர்களுக்கு, கல்லூரி தோழிகள் ஒன்று கூடி மது விருந்து அளிப்பார்கள். ஒருவருக்கொருவர் ஜாலியாக இருப்பார்கள். முதலில் ஒரு மாணவி, ஆண் நண்பருடன் ஜாலியாக இருப்பதை லைவாக பார்க்கும் மற்ற மாணவிகளும் அங்கிருக்கும் ஆண்களுடன் ஜாலியாக இருக்க தூண்டப்பட்டு, விருப்பமான ஆண் நண்பர்களை ேதர்வு செய்து ஜாலியாக இருப்பார்கள் என அந்த உரையாடலில் கூறப்பட்டுள்ளது.‘கான்செப்ட் சரக்கு பார்ட்டி – ஜாயின்ட்’ என்ற பெயரில் ஒன்று கூடுவோம் என்றும் அந்த ஆடியோவில் மாணவி கூறியுள்ளார். மேலும் தானும் ஒரே ஒருமுறை தவறு செய்து விட்டேன் என ஒப்புக்கொண்டுள்ளார். ஒருநாள் பிறந்தநாள் பார்ட்டி என தோழி வலுக்கட்டாயமாக அழைக்க அந்த வீட்டுக்கு சென்றேன். அங்கு சென்ற பின்னர் தான் ஆண் நண்பர்களும் வந்திருந்தது தெரிய வந்தது. மது விருந்து நடப்பது தெரியும். ஆனால் ஆண் நண்பர்கள் வருவது தெரியாது. விருந்து தொடங்கிய சிறிது நேரத்திலேயே நானும் தவறு செய்து விட்டேன். அதன் பின்னர் பலமுறை என்னை அழைத்தனர். ஆனால் நான் செல்லவில்லை என கூறி அந்த மாணவி கதறி அழுகிறார். தற்போது தன்னை இந்த கும்பலின் பிடியில் சிக்க வைக்க சிலர் முயற்சிப்பதாகவும் அந்த ஆடியோவில் கூறி உள்ளார். ”சக மாணவியின் செய்கையால் தூண்டப்பட்டு தானும் தவறு செய்து விட்டேன். இனி செய்யமாட்டேன், தப்பா நினைக்காதீர்கள்” என்றும் அவர் கூறுகிறார்.இந்த ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து தற்போது விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட பங்களாவின் உரிமையாளர் யார்? இங்கு யார், யார் வந்தார்கள் என்பது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த ஆடியோவைக் கேட்ட பெற்றோர்கள் இப்படியும் நடக்குமா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். ேபாலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், விடுமுறை தினங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்களது ஆண் நண்பர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்தி மது விருந்து உள்பட அனைத்து விருந்தும் நடத்தி உள்ளனர். இது பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கால கட்டம். தங்களது பிள்ளைகளை சுதந்திரமாக வளர்க்கிறோம் என்ற போர்வையில் இது போன்ற சீரழிவுக்கு அவர்களே காரணமாகி விடுகிறார்கள் என்றார். கல்லூரி மாணவிகள் மது விருந்தளித்து, சக மாணவர்களுடன் உல்லாசமாக இருந்ததாக வெளியாகி உள்ள ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

தண்ணீர் பிடிப்பதில் தகராறு நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது

காரில் புகையிலை பொருட்கள் கடத்திய ராஜஸ்தான் வாலிபர் கைது

தாய்லாந்தில் இருந்து பச்சோந்திகளை கடத்தி வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது