குன்னூர் அருகே லாரியில் டீசல் திருடியவர் கைது

 

ஊட்டி, ஆக.2: கோவை மாவட்டம் மேட்டுபாளையம், பொன்விழா நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (52). இவர், சொந்தமான லாரி வைத்துள்ளார். இவரிடம் ஊட்டி லவ்டேல் மேல்காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் வாட்டர் சர்வீஸ் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்து ஓட்டுநர் ராஜ்குமார் டீசல் திருடியதாக கூறப்படுகிறது.

இதனை லாரி உரிமையாளர் பன்னீர்செல்வம் கையும் களவுமாக பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து பன்னீர்செல்வம் குன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ராஜ்குமாரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். இதில், ராஜ்குமார், நிறுத்தி வைத்திருந்த லாரியில் இருந்து 20 லிட்டர் டீசலை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வழக்குபதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை