குத்தாலம் அருகே கீழே சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் மின் கம்பம்-உடனே சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

குத்தாலம் : மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, கருப்பூர் ஊராட்சி கரை கண்டத்தில் கும்பகோணம் முதல் தரங்கம்பாடி செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பல மாதங்களாக முழுவதும் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் சாய்ந்து இருப்பதனால் அதில் பழுதான மின் விளக்கைக்கூட மாற்ற முடியாமலும், இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வெளிச்சம் இல்லாமல் இருட்டில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மின் கம்பத்தை மின்சார வாரிய அதிகாரிகள் மின்சாரத்தில் அலட்சியம் காட்டாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் உடனடியாக சாலையோரம் சாய்ந்து இருக்கும் மின் கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க 141 இடங்களில் முன்னெச்சரிக்கை கருவி

தஞ்சை,சேலம் மினி டைடல் பூங்காகளை திறந்துவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு அன்புமணி வரவேற்பு!