குண்டாசில் இருவர் கைது: தாம்பரம் கமிஷனர் ரவி உத்தரவு

சென்னை: திருச்சி காட்டூரை சேர்ந்த பிரவீன் (எ) அசோக் (29), பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கார்களை பெட்ரோல் ஊற்றி எரித்தல், கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் வழிப்பறி, கூட்டாளிகளுடன் சேர்ந்து திருச்சியில் திருட்டு, ஆள்கடத்தல், கொள்ளை, வெடிகுண்டு வீசுதல் போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை மற்றும் ஆள்கடத்தல் என 2 வழக்குகளும், தேனி மாவட்டத்தில் கொள்ளையடித்தது, அம்பத்தூர் பகுதியில் ஆள் கடத்தல், திண்டுக்கல் மாவட்ட பழனி காவல் நிலையத்தில் ஆள்கடத்தல் ஆகிய வழக்குகளும் இவர் மீது நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அசோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல், மேடவாக்கத்தை சேர்ந்த சத்யகுமார் (எ) சத்யா (25), தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அடிதடி, கொலை, கொள்ளை உள்ளிட்ட 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க தாம்பரம் காவல் ஆணையர் ரவி உத்தரவிட்டார். …

Related posts

தெலுங்கானாவில் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடி: 2 பேர் கைது ரூ.48 லட்சம், 82 சவரன் பறிமுதல்: வந்தவாசி, செங்கல்பட்டில் மையம் அமைத்து கைவரிசை

மாந்தீரிகம், சூனியம் வைத்ததாக கூறி 11 வயது சிறுவன் உட்பட 9 பேர் படுகொலை: சட்டீஸ்கரில் 2 சம்பவத்தில் நடந்த கொடூரம்