விழுப்புரம், ஜூன் 9: விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட பண்ருட்டி வாலிபர்கள் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பண்டரக்கோட்டையை சேர்ந்தவர் நல்லசிவம்(22). அதேபோல் புது தெருவை சேர்ந்தவர் அருள்(21). இருவரும் தொடர் வழிப்பறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த மே மாதம் 14ம் தேதி திருவெண்ெணய்நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரடிப்பாக்கம், இருவேல்பட்டு ஆகிய பகுதிகளில் தரைபாலம் அருகே சென்று கொண்டிருந்த நபர்களை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். இது குறித்த புகார்களின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர் குற்றத்தில் ஈடுபட்டு வந்த இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி தீபக் சிவாச் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் பழனி, நேற்று அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதை தொடர்ந்து 2 பேரையும் திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் பண்ருட்டி வாலிபர்கள் கைது
previous post