குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொள்ளை போன்ற பல்வேறு வழக்கில்  சம்மந்தப்பட்ட குற்றவாளியான காஞ்சிபுரம் சதாவரம்பகுதியை சேர்ந்த உதயா (24). வாலாஜாபாத் காவல் நிலையத்தில் கொள்ளை, கொலை முயற்சி போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான காஞ்சிபுரம் வையாவூரை சேர்ந்த அருண்குமார் (எ) வையாவூர் அருண் (23) என்பவரையும்  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட  போலீஸ் எஸ்பி சுதாகர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையின் ஏற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, 2 பேரையும் ஓராண்டு தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார் இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்….

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்