தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், நாச்சியார்கோவில், கம்மாளர் தெருவை சேர்ந்த ரவி மகன் ஜெகன் என்கிற தமிழரசன் (30). இவரை தஞ்சாவூர் எஸ்பி ஆஷிஸ்ராவத், பரிந்துரையின் பேரிலும், அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையிலும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.