குணதிலகாவுக்கு ஜாமீன்

உலக கோப்பை டி20 போட்டிக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணியில் இடம் பெற்றிருந்த குணதிலகா(31) ேடட்டிங் ஆப் மூலமாக இளம்பெண்ணுடன் பழகியதாகவும், சிட்னியின் ரோல் பேயில் உள்ள இளம்பெண் வீட்டில் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் கொடுத்தார்.  இதையடுத்து குணதிலகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஜாமீன் கோரி சிட்னி நீதிமன்றத்தில் குணதிலகா கடந்த 7ம் தேதி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி, குணதிலகாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஆனால், அவர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது….

Related posts

சில்லி பாய்ன்ட்…

கோபா கோப்பை கால்பந்து:10 வீரர்களுடன் விளையாடி பைனலுக்கு முன்னேறிய கொலம்பியா

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை கைப்பற்றுவோம்: வாஷிங்டன் சுந்தர்