சேத்தியாத்தோப்பு, மே 20: சேத்தியாத்தோப்பு அருகே பெரியக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் இளம்வழுதி. இவரது 21 மாத ஆண் குழந்தை இரக்ஷன். நேற்று மாலை வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழங்தையை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது வீட்டின் பின்பக்கத்தில் இருந்த வடிகால் குட்டையில் விழுந்து குழந்தை இறந்து கிடந்தது கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.