குட்கா விற்ற 2 பேர் கைது

ஊத்தங்கரை, ஜூலை 20: ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி எஸ்எஸ்ஐ ஜெயகாந்தன் தலைமையிலான போலீசார், குன்னத்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டி கடையில் தடை செய்த குட்கா விற்ற முனவர்பாஷா (46) என்பவரை கைது செய்தனர். இதேபோல் சிங்காரப்பேட்டை எஸ்ஐ நிர்மலா தலைமையிலான போலீசார், ரோந்து பணியின் போது, பெட்டிக்கடையில் குட்கா விற்ற ஜியாவுல்லா (28) என்பவரை கைது செய்தனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்