பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.10: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெனசி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(49). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக, பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரது கடையில், சோதனை நடத்தினர். அப்போது அவரது கடையில், 4கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சுரேஷை கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர். பின்னர் பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.