சேந்தமங்கலம், மார்ச் 17: சேந்தமங்கலம் பகுதியில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதியில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மளிகை கடை, டீக்கடை, ஹோட்டல் கடையில் வாங்கி வீட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வகுமார் தலைமையில், சேந்தமங்கலம் எஸ்ஐ சுப்பிரமணி மற்றும் போலீசார், சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஜங்களாபுரம் பகுதியை சேர்ந்த கீதா, சாலையூர் பகுதியை சேர்ந்த சேகர், நைனாமலை அடிவாரப் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேல் ஆகியோர் மகளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த 3 மளிகை கடைகளுக்கும் சீல் வைத்து அபராதம் விதித்தனர். மற்ற கடைகளுக்கும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்ற கூடாது என
எச்சரித்தனர்.