குட்கா பதுக்கிய ‘பரோட்டா’ கைது

 

ராஜபாளையம், மே 8: ராஜபாளையத்தில் குட்கா பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜபாளையம் பகுதியில் மாவட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் கணேசன் மற்றும் போலீசார் தலைமையில் ரோந்து சென்றனர். அப்போது ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் சரகத்துக்கு உட்பட்ட ஆசிரியர் காலனி பகுதியில் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் ஜெயச்சந்திரன் என்ற சேட்டன்(30), ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி தெருவை சேர்ந்த ராஜ் மகன் பிரகாஷ் என்ற பரோட்டா(23), பரமசிவம் மகன் இசக்கி முத்து(24) ஆகியோரிடம் இருந்து 375 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் நான்கு சக்கர வாகனம் மற்றும் ரொக்க பணம் ரூ.19 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை