குட்கா பதுக்கிய கடைகளுக்கு சீல்

காரிமங்கலம், அக்.9: காரிமங்கலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த கோபால் மற்றும் அலுவலர்கள், போலீசார், காரிமங்கலம் கடைவீதி பகுதியில் உள்ள பீடா கடை மற்றும் அனுமந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள மளிகை கடை ஆகிய 2 கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததுடன் 2 கடைகளுக்கும் தலா ₹25 ஆயிரம் அபராதம் விதித்து கடைகளுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து காரிமங்கலம் பைபாஸ் ரோடு பொம்மஅள்ளி பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

Related posts

கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

கணவரின் உடலை மறு போஸ்ட்மார்டம் கோரிய மனு தள்ளுபடி

திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு