குட்கா கடத்திய வாலிபர் கைது

வாழப்பாடி, ஜூன் 29: வாழப்பாடி போலீசார் பேளூர் பிரிவு சாலையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டூவீலரில், மூட்டையுடன் வந்த நபரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்ேபாது அதில் ₹70ஆயிரம் மதிப்பிலான குட்கா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் கிராமத்தை சேர்ந்த சார்வன்குமார்(20) என்பது தெரிய வந்தது. இவர் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இருந்து வாழப்பாடிக்கு விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சார்வன்குமாரை போலீசார் கைது செய்து குட்கா, டூவீலரை பறிமுதல் செய்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை