குட்கா கடத்தியவர் கைது

ஒசூர், ஜூன் 2: ஓசூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு, எஸ்ஐ தனசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்றிருந்தவரை பிடித்த போலீசார், அவர் வைத்திருந்த பையில் சோதனை நடத்தினர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட ₹8 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் செந்தில் (47) என்பதும், பெங்களூருவில் இருந்து கோவைக்கு புகையிலை பொருட்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், செந்திலை கைது செய்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை