குடும்ப தகராறில் விபரீதம் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

 

பூந்தமல்லி: சென்னை வளசரவாக்கம் விஜயா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (55). இவர் அப்பகுதியில் உள்ள காயலாங்கடையில் சரக்கு வாகன ஓட்டுனர். மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து, மனைவி மற்றும் குழந்தைகளுடன் தகராறு செய்வாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல குடித்துவிட்டு வந்த இவர், தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர், ஹாலில் தூங்கச்சென்றார்.

காலையில், வீட்டில் உள்ளவர்கள் பாலாஜி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி