குடியை நிறுத்தாததால் தாய் வீட்டுக்கு சென்ற மனைவி கணவன் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர்:  திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா (40). இவருக்கும் கூடுவாஞ்சேரியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சர்மிளா என்ற 12 வயதில் மகளும் உள்ள நிலையில் திருநாவுக்கரசு நோய்வாய்பட்டு உயிரிழந்தார். அதனையடுத்து போளிவாக்கம் பகுதியைச் சேர்ந்த டிரைவரான லோகேஷ்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார் கல்பனா.  தற்போது 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது. டிரைவரான லோகேஷ்குமாருக்கு குடி பழக்கம் இருப்பதை கல்பனா பல முறை கண்டித்துள்ளார்.  தொடர்ந்து குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு லோகேஷ்குமாரை பிரிந்து தாய் வீடான வந்தவாசிக்கு கல்பனா சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 30-ந் தேதி லோகேஷ்குமார் மனைவி கல்பனாவுக்கு போன் செய்தும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இதனால் கடந்த 3 நாட்களாக போன் வராததால் கல்பனா கணவர் லோகேஷ்குமாருக்கு போன் செய்துள்ளார். செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதாக வரவே கல்பனா தனது உறவினரை தனது வீட்டிற்கு அனுப்பி பார்க்க சொல்லியுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு லோகேஷ்குமார் தங்கியிருந்த  வீட்டிற்கு சென்று உறவினர்கள் பார்த்த போது  தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கல்பனைவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  விரைந்து வந்த கல்பனா மணவாளநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் லோகேஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகினறனர்….

Related posts

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

பொன்னேரியில் 40 சவரன் நகை கொள்ளை..!!

பாம்பு கடித்து பலி: குடும்பத்துக்கு இழப்பீடு தர ஐகோர்ட் ஆணை