சென்னை: சென்னையில் குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற நபர் போலீசில் சரணடைந்தார். புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்கள் தளபதி, சண்முகப்பிரியா தம்பதி. கப்பல் தொழிலாளியான தளபதி கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் மது குடித்துவிட்டு மனைவி, மகன்களை அடித்து துன்புறுத்துவது வழக்கம் என கூறப்படுகிறது. இதனால் வீட்டை தன் பெயரில் எழுதி தருமாறு கேட்டு வந்துள்ளார் சண்முகப்பிரியா. நேற்று வழக்கம் போல் மது அருந்திவிட்டு வந்த கணவரிடம் அதுகுறித்து கேட்கவே, ஆத்திரத்தில் சமையல் அறையில் இருந்த கத்தியை கொண்டு சண்முகப்பிரியாவை சரமாரியாக குத்தியுள்ளார் தளபதி. பின்னர் நேராக காவல் நிலையம் சென்று சரணடைத்திருக்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். …
குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்: கொலை செய்துவிட்டு போலீசில் சரண்
previous post