குடிபோதையில் தீக்குளித்து பெயிண்டர் பலி

ஈரோடு, செப்.21:கொடுமுடி கொளத்துப்பாளையம், தேவனாம்பாளையம் காலனியை சேர்ந்தவர் மாதவன்(34). இவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரண்யா. இவர் ஊஞ்சலூர் பேரூராட்சியில் பணியாற்றி வருகின்றார். குடிபோதைக்கு அடிமையான மாதவன் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த மாதவன் கெரசின் எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பின்னர் பலத்த தீ காயங்களுடன் குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாதவன் இறந்தார். இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி