குடிபோதையால் ஏற்பட்ட தகராறில் விவசாயி துப்பாக்கியால் சுட்டுக்கொலை: மேட்டுப்பாளையம் அருகே பயங்கரம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மேடூர் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி என்ற சின்னத்தம்பி (55). விவசாயி. இவர், ஆடு வளர்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கண்டியூர் பகவதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (24) என்பவர் அப்பகுதியில் ஆடு ஒன்று காணாமல் போய் விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து, அங்கு சென்ற சின்னத்தம்பி இரவு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை சின்னத்தம்பி துப்பாக்கியால் சுட்டு இறந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு உறவினர்கள் சென்று பார்த்தனர். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.அதன்பேரில், அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் ரஞ்சித் என்ற வாலிபரை பிடித்து சென்று காவல் நிலையத்தில் தீவிர விசாரணைஇலங்கை கடற்படை அட்டகாசம் வலைகளை வெட்டி வீசி மீனவர்கள் விரட்டியடிப்பு மேற்கொண்டனர். விசாரணையில் பலியான சின்னத்தம்பி, நேற்று முன்தினம் இரவு ரஞ்சித்துடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ரஞ்சித், சின்னத்தம்பியை துப்பாக்கியால் சுட்டதாகவும், சம்பவ இடத்திலேயே சின்னத்தம்பி உயிரிழந்ததும் தெரிய வந்தது.மேலும், ரஞ்சித் வசம் துப்பாக்கி எப்படி வந்தது? வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட கள்ளத்துப்பாக்கியா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, போலீசார் சின்னத்தம்பி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். …

Related posts

கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப இருந்தது ₹1.60 கோடி செம்மரம் கடத்திய 4 பேர் கைது

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்