குடிநீர் விநியோகம் இன்று நிறுத்தம்

சேலம், செப்.18: சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர்த்திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் மின்சாரப் பராமரிப்பு பணிகள் இன்று (18ம்தேதி) நடைபெறுகிறது. இதனால், சேலம் மாநகராட்சிப் பகுதியில் இன்று ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திகொள்ளுமாறு மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி