குடிநீர் பைப் உடைத்தவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த பூண்டி ஊராட்சி எம்சிஎஸ்.நகர் பகுதியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குடிநீர் பைப்புகளை வீடுகளுக்கு இணைக்கக்கூடாது என்று கூறி பூண்டி சந்திரசேகர் நகரை சேர்ந்த தண்டபாணி (41) என்பவர் பணியை தடுத்து நிறுத்தியுள்ளார். அத்துடன் பணி செய்துகொண்டிருந்த ஆட்களையும் தாக்கியதுடன் பணி செய்வதற்கு இடைஞ்சல் கொடுத்துள்ளார். பின்னர் அவர், குடிநீர் இணைப்பு குழாய்களை உடைத்து சேதப்படுத்தினார்.இதுகுறித்து பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பசுபதி கொடுத்துள்ள புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், எஸ்ஐ சிவா வழக்குப்பதிவு செய்து விசாரித்து தண்டபாணியை கைது செய்தனர்….

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி மோசடி வழக்கில் பெண் கல்வி அதிகாரி கைது

குழந்தையுடன் மனைவி மாயம் மாமியார், மூதாட்டியை வெட்டி கொன்ற மருமகன்