குடிநீர், கழிவுநீர் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள்: உடனடியாக செலுத்த வாரியம் வேண்டுகோள்

சென்னை: குடிநீர், கழிவுநீர் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள் என்பதால், உடனடியாக செலுத்த பொதுமக்களுக்கு குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியினையும், குடிநீர் கட்டணங்களையும் கடைசி நாளான இன்று செலுத்தவேண்டும். வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பணிமனை வசூல் மையங்கள் இன்று இரவு 8 மணி வரை இயங்கும்.எனவே பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய அனைத்து வரிகள், வரிக் கட்டணங்களை உடனடியாக செலுத்தி சென்னை குடிநீர் வாரியத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைக்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்