குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

 

தேனி, மே 10: தேனி நகராட்சியில் விநியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக உள்ளதால் குடிநீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும் என தேனி நகராட்சி அறிவித்துள்ளது. தேனி நகரில் உள்ள 33 வார்டு மக்களுக்கும், வைகை ஆற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, வைகை அணையில் நீர்மட்டம் குறைந்திருப்பதால், ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் மிகவும் கலங்கலாக வருகிறது. இதனால் நகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி