விருதுநகர், ஜூன் 29: குடிக்க பணம் தராததால் தாய், தந்தையை வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே மிளகாய்பட்டியை சேர்ந்தவர் கடற்கரை(75). இவரது மகன் மான்ராஜ்(34) தந்தை வீட்டின் அருகில் மனைவியுடன் வசித்து வருகிறார். நேற்று தந்தை, மருமகள் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மான்ராஜ், தந்தையிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார்.
பணம் கொடுக்க மறுக்கவே, அவதூறாக தந்தையை திட்டி, அரிவாளை எடுத்துவந்து கையில் வெட்டி உள்ளார். தடுக்க வந்த தாய் மாரியம்மாளின் இரு கைகளிலும் வெட்டி உள்ளார். வீட்டிற்குள் ஓடிச்சென்று கதவை மூடிய மாரியம்மாளை விரட்டி சென்று கதவை வெட்டி சேதப்படுத்தி தப்பி ஓடிவிட்டார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் கடற்கரை, மாரியம்மாள் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ள கடற்கரை வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் மான்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.