குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குவிண்டால் பருத்தி 6976க்கு ஏலம்

 

வலங்கைமான், ஆக. 18: டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி அறுவடைக்கு பிறகு கோடை சாகுபடி ஆக பெரிய அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுவது வழக்கம். குடவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் குடவாசல் கொரடாச்சேரி சாலையில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இந்நிலையில் நடப்பு பருவத்திற்கான பருத்தி ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் மல்லிகா (பொ) உத்தரவின்பேரில் நடைபெற்றது.பருத்தி ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்தனர். கரூர், ஈரோடு, சேலம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் 6 ஆயிரத்து 976 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 899க்கும் சராசரி விலையாக குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 324க்கும் ஏலம் போனது. பருத்தி மறைமுக ஏலத்தில் 133.76 குவிண்டால் பருத்தி 8 லட்சத்து 49ஆயிரத்து 728 ரூபாய்க்கு ஏலம் போனது.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தியை நன்கு உலர்த்தி கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து பயன்பெற ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் ரமேஷ் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

அதிக ஒளி பாய்ச்சி மீன் பிடித்த 4 படகுகளின் மின் விளக்குகள் பறிமுதல்

வள்ளியம்மன் கோயில் பொங்கல் விழா பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

மருத்துவத் துறையில் பணி வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்