குஜராத்தில் பிறந்து 15 நாட்களே ஆன இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா

விதோக்கரா: குஜராத்தில் பிறந்து 15 நாட்களே ஆன இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விதோக்கரா நகரில் கடுமையான வயிற்று போக்குடன் குழந்தைகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட்டன. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் குழந்தைகளுக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த குழந்தைகளை கவனித்து வந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. டெல்லியில் 114 நாட்களுக்கு பிறகு ஒருநாளில் அதிகபட்சமாக 2,790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் முலம் டெல்லியில் கொரோனா 4-வது கட்ட பரவல் உறுதியாகியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் ஒரே நாளில் 44,183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 8,646 பேருக்கு உறுதி செய்யபோட்டுள்ளது. இந்த பாதிப்பு இதுவரை இல்லாதது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  …

Related posts

அவ்வளவு சீக்கிரம் நான் இறந்துவிட மாட்டேன்; மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கும் வரை உயிரோடு இருப்பேன்: மேடையில் மயங்கிய பின் மீண்டும் எழுந்து கார்கே ஆவேசம்

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்