குங்பூ மாஸ்டர் மயங்கி விழுந்து சாவு

நித்திரவிளை, ஜூன் 20: கொல்லங்கோடு அருகே சூழால் பகுதியை சேர்ந்தவர் செல்வதாஸ் (47), குங்பூ மாஸ்டர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை மூன்று மணியளவில் கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரைவில்லை. இதையடுத்து, குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது, செல்வதாஸ் கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், செல்வதாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது சம்பந்தமாக செல்வதாஸ் மனைவி ஷீபா மோள் (42) கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை