கீழக்கரையில் கந்தூரி விழா கொடியேற்றம்

கீழக்கரை, ஜூன் 21: கீழக்கரை சாலை தெரு ஓடைக்கரை பள்ளி ஜமாத் மஹான் 18 வாலிபர்கள் ஷஹீத் வலியுல்லாஹ் தர்ஹா 849ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கீழக்கரை புது பள்ளி கதீப் மன்சூர் நூரி ஆலிம், ஜமாத் உலமாக்கள் ஆரிப் அன்வாரி ஆலிம், அப்துல் சலாம் பாக்கவி ஆலிம், கலீல் ரஹ்மான் ஆலிம், முஹமது அஸ்லம் ஆலிம் ஆகியோர் உலக நன்மை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

இதில் ஜமாத் பிரமுகர்கள் அப்துல் ஜப்பார், சிக்கந்தர் பாட்ஷா, சாகுல் ஹமீது (எ) ஹாஜா, கீழக்கரை புரவலர்கள் சீனாதானா செய்யது அப்துல் காதர், சதக் அப்துல் காதர், கீழக்கரை நகராட்சி துணை தலைவர் ஹமீது சுல்தான் கீழக்கரை அனைத்து ஜமாத்தார், அரூஸ்யா பாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 18 நாள் நடைபெறும் பிரார்த்தனையில் தினமும் இரவு மவ்லிது ஓதி நார்சா வழங்கப்படுகிறது. கந்தூரி விழா ஜூலை 6ம் தேதி நடைபெறவுள்ளது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு