கிழக்கு மாவட்ட மதிமுக சார்பில் கொடி ஏற்று விழா

ஆத்தூர், ஜூலை 30: சேலம் கிழக்கு மாவட்ட மதிமுக சார்பில், கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு, ஆத்தூர் அருகே பைத்தூர், கூலமேடு, கெங்கவல்லி ஒன்றியம் தம்மம்பட்டி, கெங்கவல்லி, கூடமலை மற்றும் தலைவாசல் தெற்கு ஒன்றியம், வீரகனூர் பேரூராட்சி, நாவலூர் ஊராட்சி, தலைவாசல் வடக்கு ஒன்றியம் தலைவாசல், நத்தகரை ஊராட்சி, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் தும்பல் ஊராட்சி, நரசிங்கபுரம் நகரம் ஆகிய 20க்கும் மேற்பட்ட இடங்களில் மாவட்ட செயலாளர் கோபால்ராசு தலைமையில், கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட அவை தலைவர் ஜெயராமன், மாவட்ட பொருளாளர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் பொன்சேதுபதி, கோவி அசோகன், காட்டுக்கோட்டை ராமு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கநெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து