சேலம், ஜூலை 9: சேலம் மின்பகிர்மான சேலம் கிழக்கு கோட்டத்தில், நாளை (10ம் தேதி) காலை 11 மணிக்கு, உடையாப்பட்டி செயற்ெபாறியாளர் அலுவலகத்தில், சேலம் கிழக்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. கூட்டத்திற்கு மின்வாரிய செயற்ெபாறியாளர் குணவர்த்தினி தலைமை வகிக்கிறார். இதில், கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.