கிளீனர் பலி

வேடசந்தூர், ஜூலை 17: வேடசந்தூர் அருகே கோவிலூர் பேர்நாயக்கன்பட்டியில் உள்ள மணல் குவாரியில் கரூரில் இருந்து மண் எடுக்க லாரி ஒன்று ஜூலை 11ல் வந்தது. அப்போது லாரியை பின்னோக்கி நகர்த்த போவதாக கூறிய டிரைவர் சுப்பிரமணியன், முன்னோக்கி நகர்த்தியதில் கிளீனர் அழகேசன் மீது மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அழகேசன் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். இதுகுறித்து எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி