காரைக்கால்,டிச.23: காரைக்கால் மாவட்ட சமாதான கமிட்டி சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி காரைக்காலில் உள்ள புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை வகித்தார். காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் (தெற்கு) முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை பங்குத்தந்தை டி.ஜோசுவா, சமாதான கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.