கிறிஸ்தவ மக்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து கூறிய இஸ்லாமியர்கள்

 

சிவகாசி , டிச.25: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிவகாசியில் கிறிஸ்தவ மக்களுக்கு இனிப்பு வழங்கி இஸ்லாமியர்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று நாடு முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. சிவகாசியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிவகாசி சி.எஸ்.ஐ. இராக்லாந்து ஞாபகார்த்த ஆலயத்திற்கு சென்ற ஏராளமான இஸ்லாமியர்கள் ஆலயத்தின் தலைமை குரு டேவிட்சன், உதவிகுரு தவராஜ் மற்றும் கிருஸ்தவ மக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.

கிருஸ்தவ ஆலயத்திற்கு வந்த இஸ்லாமியர்களை கிறிஸ்தவ மக்கள் அன்புடன் வரவேற்றனர். நிகழ்ச்சியில் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் கிறிஸ்தவ ஆலயத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் ஸ்டீபன், மகேந்திரன், அதிசியம், சீமான்துரை, தொழில் அதிபர் செய்யது இப்ராஹிம் கலந்து கொண்டனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு