கிறிஸ்தவர்களுக்கு மயான இடம் கலெக்டரிடம் மனு

திண்டுக்கல், ஜூலை 3: பழனியில் அனைத்து கிறிஸ்தவ திருச்சபை மக்களுக்கு மயான இடம் ஒதுக்க வேண்டும் என கிறிஸ்தவ அமைப்பு சார்பில் கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளிக்கப்பட்டது.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பழனி நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. மேலும் பழனி தாலுகா பகுதியிலும் அரசு இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த இடங்களை மீட்டு அனைத்து கிறிஸ்தவ திருச்சபை மக்களுக்கு மயானஇடம் அமைத்துக் கொடுக்க வேண்டும். இது குறித்து ஏற்கனவே பழனி தாசில்தாரிடம் மனு அளித்துள்ளோம். எனவே, கலெக்டர் இதுகுறித்து விசாரணை செய்து, மயான இடம் அமைத்துத் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை