கிரைண்டரில் மாவு அரைத்த போது மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி

திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வளநாடு அருகே உள்ள ஆத்துப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சங்கர். இவரது மனைவி ராதிகா(24).  திருமணமாகி  3ஆண்டு ஆகிறது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த ராதிகா கிரைண்டரில் மாவு அரைத்துள்ளார். அப்போது கிரைண்டரின் ரப்பர் வளையம் அறுந்ததாகவும், அதை சரிசெய்ய ராதிகா முற்பட்டபோது,   மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. மயங்கிய நிலையில் கிடந்த ராதிகாவை கணவர் சங்கர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ராதிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். தகவலறிந்து வந்த வளநாடு போலீசார்  ராதிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா.! கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்