கிருஷ்ணராயபுரம், மார்ச் 2: கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியை.அனிதா தலைமையில் பேரூராட்சி தலைவர். சௌந்தரப்பிரியா, வட்டார கல்வி அலுவலர். செந்தில்குமாரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி ஆசிரியர். ஞானசுந்தரம் வரவேற்றார்.
விழாவில் கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.