கிருஷ்ணராயபுரம் அருகே ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம்

கிருஷ்ணராயபுரம். ஜூன் 27: கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை வைத்திய நகரை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (58), இவர் தனது ஆட்டோவில் கடந்த 23ம் தேதி லாலாபேட்டையில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் செல்லும்போது எதிரே லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்த சிவா (24) என்பவர் பைக் ஓட்ட அதே பகுதியை சேர்ந்த முருகன் (34) என்பவர் பின்னால் அமர்ந்து கொண்டு வரும்போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானார்கள்.

அதில் படுகாயம் அடைந்த முருகன், வெள்ளைச்சாமி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு