Saturday, September 28, 2024
Home » கிருஷ்ணகிரி கால பைரவர் கோயிலில் சிறப்பு பூஜைகள்

கிருஷ்ணகிரி கால பைரவர் கோயிலில் சிறப்பு பூஜைகள்

by Francis

 

கிருஷ்ணகிரி, மே 31: தேய்பிறை அஷ்டமியையொட்டி கிருஷ்ணகிரி கால பைரவர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், கால பைரவ மஹா ஹோமம், பூர்ணாஹூதி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன.

உற்சவ கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. வருகிற ஜூலை 12ம் தேதி கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால், காலபைரவ சுவாமி மூலவர் உள்ள அறை மூடப்பட்டு, கோயிலுக்கு அருகில் சிவலிங்கம் மற்றும் உற்சவ காலபைரவர் வைத்து யாகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சிவலிங்க வடிவில் சிவன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

eighteen + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi