கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பாரதி நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் காவேரி. இவரது மனைவி லட்சுமியம்மாள் (72). சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் 18ம் தேதி காலை, வீட்டில் இருந்து லட்சுமியம்மாள் வெளியே சென்றார். பின்னர், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது மகன் ரவி, டவுன் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் மூதாட்டி மாயம்
previous post