கிரிக்கெட் போட்டி; ஆர்கேஆர் ஞானோதயா பள்ளி அணி வெற்றி

உடுமலை, ஜன. 7: உடுமலையில் உள்ள ஆர்கேஆர் கல்வி நிறுவனங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஆர்கேஆர் குருவித்யா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஆர்கேஆர் குருவித்யா, கிரிக்ஸ், ஞானோதயா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளை ஆர்கேஆர் கல்வி குழும தலைவர் ராமசாமி துவக்கிவைத்தார். இறுதிச்சுற்றில் ஆர்கேஆர் குருவித்யா மேல்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தி, ஆர்கேஆர் ஞானோதயா பள்ளி அணி வெற்றிக்கோப்பையை தட்டிச் சென்றது. தொடர் நாயகன் விருதை ஞானோதயா பள்ளி மாணவன் ஸ்ரீதரும், சிறந்த பேட்ஸ்மேனாக குருவித்யா பள்ளி மாணவன் பிரவும், சிறந்த பந்துவீச்சாளராக கிரிக்ஸ் பள்ளி மாணவன் ராகுலும் தேர்வு பெற்றனர்.வெற்றிபெற்ற மாணவர்கள் ஆர்கேஆர்கல்வி குழுமங்களின் தலைவர் ராமசாமி, செயலர் கார்த்திக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை