கிணற்றில் விழுந்த வாலிபர் மீட்பு

காரைக்குடி, மே 9: காரைக்குடி டிடி நகர் 3ம் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(30). இவர்,நேற்று முன்தினம் இரவு அதேபகுதியில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் கிணற்றில் இருந்த கயிற்றை பிடித்துக் கொண்டு மேலே ஏறிவரமுடியாமல் தவித்துள்ளார். நேற்று காலை கிணற்றில் ஒருவர் விழுந்து கிடப்பதை பார்த்த வீட்டின் உரிமையாளர்கள். தீயணைப்பு துறையிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு நிலைய அதிகாரி நவநீதகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படையினர் கயிறுகட்டி உள்ளே இறங்கி ரஞ்சித்குமாரை உயிருடன் மீட்டனர்.

Related posts

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வில் 131 மாணவர்கள் சேர்க்கை

மக்கள்குறைதீர் கூட்டத்தில் 548 மனுக்கள் மாயனூரில் இருந்து தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் சாயக்கழிவுநீர் கலப்பா?