காரைக்குடி, மே 9: காரைக்குடி டிடி நகர் 3ம் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(30). இவர்,நேற்று முன்தினம் இரவு அதேபகுதியில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் கிணற்றில் இருந்த கயிற்றை பிடித்துக் கொண்டு மேலே ஏறிவரமுடியாமல் தவித்துள்ளார். நேற்று காலை கிணற்றில் ஒருவர் விழுந்து கிடப்பதை பார்த்த வீட்டின் உரிமையாளர்கள். தீயணைப்பு துறையிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு நிலைய அதிகாரி நவநீதகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படையினர் கயிறுகட்டி உள்ளே இறங்கி ரஞ்சித்குமாரை உயிருடன் மீட்டனர்.