கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு

ராஜபாளையம், மே 30: ராஜபாளையம் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார். ராஜபாளையம் அருகேயுள்ள தெற்குவெங்காநல்லூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் செந்தில்வேல் பாண்டியன் மகன் விக்னேஸ்வரன்(36). தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணிபுரிந்து வந்தார். இவர் குலசேகரப்பேரி கண்மாய் அருகே உள்ள தனியார் கிணற்றில் குளிக்கச் சென்றார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், இவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, அவரது ஆடைகள் கிணற்றின் அருகே கிடந்தது. இதையடுத்து, ராஜபாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி தேடியபோது விக்னேஸ்வரனை சடலமாக மீட்டனர். பின்னர், அவரது உடல் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு