கிணற்றில் தவறி விழுந்த 10 வயது சிறுவன் மீட்பு

ராசிபுரம், மே 4: ராசிபுரம் அடுத்த அத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் துரையன்(37), நெசவுத்தொழிலாளி. இவரது மனைவி பேபி(30). இவர்களுக்கு நித்தீஸ்வரன்(10) என்ற மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். நேற்று மாலை, நித்தீஸ்வரன் மற்றும் சிலர் அப்பகுதியில் காலி டப்பாவை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, அருகில் உள்ள முத்து என்பவரின் விவசாயி தோட்டத்தில் உள்ள கிணற்றில் நித்தீஸ்வரன் தவறி விழுந்தான். அவனுடன் இருந்த நண்பர்கள், அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டனர். நீச்சல் தெரியாத நித்தீஸ்வரன், கிணற்று மோட்டார் கட்டியுள்ள கம்பியை பிடித்து மேலே ஏறி வந்து, பாம்பேரியில் அமர்ந்து கொண்டு சத்தம் போட்டுள்ளான். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்ததுடன், இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வரும் முன்பாகவே, கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் கயிறு கட்டி உள்ளே இறங்கி நித்தீஸ்வரன் பத்திரமாக மீட்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை