கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

ஆவடி: கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார். ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் சுகுணா (83) இவர் தனது பேரன் ஜெகதீசன் (30) குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு வீட்டின் பின்புறம் 2 அடி உயரமுள்ள கிணற்றில் கழிவறைக்கு செல்வதற்காக தண்ணீர் எடுக்க முயன்ற  சுகுணா கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். தகவல் அறிந்து வந்த  அம்பத்தூர் தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்படி, திருமுல்லைவாயில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு