கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பரிதாப பலி

தர்மபுரி, ஜூன் 19: அரூர் கோட்டப்பட்டி மலைத்தாங்கி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (55). இவர் கடந்த 10 வருடங்களாக கண்பார்வை இழந்து, வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம், வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு நடந்து சென்ற போது அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, அரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், அண்ணாதுரையை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோனைக்காக கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு